தமிழின அழிப்பாளிகள் வெளிநாட்டு விசா எடுப்பதில் இடியப்ப சிக்கல்!

You are currently viewing தமிழின அழிப்பாளிகள் வெளிநாட்டு விசா எடுப்பதில் இடியப்ப சிக்கல்!

இலங்கையில் தமிழின அழிப்பை நடாத்தி போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக மேற்குலக நாடுகளுக்கான வீசா பெற்றுக்கொள்வதில் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகள் இந்த நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

53, 55, 57, 58 மற்றும் 59ம் படையணிகளைச் சேர்ந்த படைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் படை அதிகாரிகள் வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான வீசா விண்ணப்பங்களின் போது அதிகாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த அதிகாரிகள் தங்களது சொந்த தேவைகளுக்கேனும் மேற்குலக நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

போரில் பங்கேற்ற படைவீரர்களுக்கும் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படைவீரர்கள் வீசா பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் பணியாற்றிய படைப்பிரிவு, படைத்தளபதியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் வழங்க நேரிடுவதாகவும் இவ்வாறான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஓய்வுநிலை லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments