தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது!

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 10 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கித் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணமானது

(24/02/2024)பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து  நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 19/02/2024 பெல்சியத்தின் தலை நகரினை வந்தடைந்து,ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்த்த  இவ்வறவழிப்போராட்டம்,பெல்சியம் ,லுக்சாம்பூர்க் , யேர்மனி நாடுகளூடாக பிரான்சை வந்தடைந்தது.இப்போராட்டப் பயணத்தில் பல அரசியல்  சந்திப்புக்களையும், ஊடகங்களையும் சந்தித்து எழுச்சியோடு,பிரான்சு நாட்டின் எல்லையினை வந்தடைந்தது .நேற்று கம்சயிம் நகர பிதாவுடனான உரையாடலில் பல பிரதானமான விடயங்கள் எடுத்துக்கூறப்பட்டது.

குறிப்பாக, சிறிலங்கா பேரினவாத அரசு நிகழ்த்திய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களின் தாயகமான நாடாகிய தமிழீழத்தின் விடுதலை,  தமிழின அழிப்பினை தொடரும் சிறிலங்கா அரசையும் அதில் பங்கெடுத்த,போர்க்குற்றவாளிகளுக்கு பயண மற்றும் பொருளாதார தடை குறித்து விவரிக்கப்பட்டு  இந்த விடயங்களை பிரான்ஸ் உயர் மட்டங்களுக்கு எடுத்ததுச்  செல்வதாக  நகர பிதா உறுதியளித்தார்.அவை நம்பிக்கையான அடுத்த நகர்விற்கும் வழிவகுத்தன .கம்சயிம், லா வன்சுனு முதல்வர்களிடத்தில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு, பின் ஈருருளிப் பயணம் இன்றைய நாளில்  40 கிலோமீற்றர்களைக் கடந்து சில்றிக்காம் என்னும் இடத்தில் நிறைவுக்கு வந்தது

இன்று மீண்டும் இப்போராட்டம்  ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்று அங்கிருந்து  ஐ.நா நோக்கி நகரும்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 1
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 2
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 3
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 4
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 5
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது! 6
பகிர்ந்துகொள்ள

Leave a Reply