தமிழின அழிப்பிற்கு மறுபெயர் மனிதாபிமானம் காதில் பூவைக்க முனையும் இனவழிப்பாளி!
வடக்கு கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லை மனிதாபிமானமா?.
அப்படியா..?
1. அந்த மனிதாபிமானத்துக்கு ஏன் ஏறிகணைகளை பாவித்தீர்கள்.?
2. பொஷ்பரஷ் குண்டுகளை ஏன் பாவித்தீர்கள்.?
3. விமானக்குண்டுகளை ஏன் பாவித்தீர்கள்.?
4. வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை ஏன் கொன்று குவித்தீர்கள்.?
5. உணவுத்தடைகளை ஏன் போட்டு பட்டினிசாவை ஏன் நடத்தினீர்கள்.?
6. உலகத்தில் உள்ள 25, நாடுகளின் இராணுவ உதவிகளை ஏன் பெற்றீர்கள்?
7. தமிழ்மக்களை சரணாகுங்கள் என கூறி ஏன் துப்பாக்கி வேட்டுக்களை நடத்தினீர்கள்?
8. அகதி முகாங்களில் இருந்த தமிழ்மக்களை கைதுசெய்து ஏன் கொன்றீர்கள்.?
9. பெண்களை வன்புணர்வுகளை ஏன் செய்தீர்கள்.?
10. பாலச்சந்திரனுக்கு விஷ்கட் கொடுத்து கொலை செய்தது மனிதாபிமானமா.?
11. இனப்படுகொலைகள் செய்தமை மனிதாபிமானமா.?
12. முள்வேலிக்குள் தமிழர்களை அடைத்தது மனிதாபிமானமா.?
இப்படியான அநியாயங்களையும், அட்டூழியங்களையும், பொருளாதாரத்தடைகளையும், வதைகளையும் செய்துவிட்டு அதை “மனிதாபிமானம்” என்று கூறுவதே வெட்கேடானது அல்லவா.?
தமிழின அழிப்பிற்கு உங்கள் நாட்டு அகராதியில் மனிதாபிமானம் என நியாயப்படுத்துவது கேலித்தனமானது.
இனி எத்தனை வார்த்தைகளை மாற்றினாலும், உண்மையை மறைக்க முடியாது.