எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாருக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(22) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பலர் தன்னை நேரில் சந்தித்து பேசியதாகவும் அவர்கள் ஒவ்வொருவரும் தமது வருங்கால கொள்கைகளில் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.
ஆனால் தமிழ் தேசியம் பற்றி பேசும் போது தமிழ் தேசியத்தை கையில் எடுத்து மிக காத்திரமான பங்களிப்பை செய்கின்றவர்கள் கஜேந்திரகுமார் அணி.
ஆகவே தமிழ் தேசியத்திற்கே எனது ஆதரவு அவர்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.