தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

You are currently viewing தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 – முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  1

குறித்த நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக இன்று (11.05.2025) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.

தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  2

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

முள்ளி வாய்க்கால் கஞ்சியை வாங்கிப்பருகிய மாணவர்கள் இளையவர்கள் தமிழின அழிப்பின் துயரவரலாற்றினையும் கேட்டறிந்துகொண்டனர்.

இன்றைய தினம் ஆரம்பமாகிய தமிழின அழிப்பு வாரம் எதிர்வரும் (18.05.2025) நிறைவடையும்.

இதேவேளை

வலிசுமந்த வாரத்தினை தமிழ் மக்கள் பொறுப்போடும் நன்றியுணர்வோடும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் திருமிகு செல்வராசா கயேந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply