தலைமன்னாரில் சிறுவர்கள் கடத்தல் முயற்சி: மக்களின் துணிகர செயல் !

You are currently viewing தலைமன்னாரில் சிறுவர்கள் கடத்தல் முயற்சி: மக்களின் துணிகர செயல் !

தலைமன்னார் சிறீலங்கா காவற்துறைக்கு பிரிவுக்குட்பட்ட கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரண்டு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (11-05-2023) மதியவேளையில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி அவ் வீதி வழியாக பயணித்த இரண்டு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேலும், குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளி நாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொது மக்கள் தலைமன்னார் பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் தலைமன்னார் சிறீலங்கா காவற்துறைனர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments