தலைவன் வழிநின்று அனைத்துச் சதிகளையும் முறியடிப்போம்!

You are currently viewing தலைவன் வழிநின்று அனைத்துச் சதிகளையும் முறியடிப்போம்!

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல துரோக, சதிவலைப்பின்னல்களைக் கடந்த காலங்களில் சந்தித்திருக்கின்றது அப்போதெல்லாம் தேசியத்தலைவரின் நேரடி வழிகாட்டலில் அவையெல்லாம் துடைத்தழிக்கப்பட்டுவேரோடு பிடுங்கி எறியப்பட்டது.

அந்த வரலாறுகள் practical tieory கள் யாவற்றையும் தேசியத்தலைவரின் சிந்தனை பதியம் போட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள, தமிழ்த்தேசியக் கட்டமைப்புகளைச் சிதைத்தழிக்கும்செயற்பாடுகள்,உள்ளக நெருக்கடி நிலைமைகள் மிகவும் கவலையளிக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயக்கும் சக்தியாக இருக்கும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை முற்றாக அழித்து புதியதொரு வீரியமில்லாத கோட்பாட்டை உருவாக்குவதே எதிரிகளினதும். துரோகிகளினதும் சதித்திட்டம்.

இதில் மூளைச்சலவை செய்யப்பட்டு எதிரிகளின் சதிவலைப்பின்னலினுள் உள்வாங்கப் பட்ட துரோகிகளை மக்களும், தேசியச் செயற்பாட்டாளர்களும் இனங்கண்டு விட்டனர். பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகம் தேசியத்தலைவரின் சிந்தனை வழிநடத்தல், துரோகிகளை எமக்கு இனங் காட்டிவிட்டது. இது ஒரு புற்றுநோய் போன்றது. இந்த உயிர்கொல்லி (தமிழீழக் கோட்பாட்டு அழிப்பு) நோயை அழித்து தேசியத்தலைவரின் சிந்தனையை பலப்படுத்தி தமிழீழக் கோட்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் .

இதற்காக தமிழர்கள் நாங்கள் ஒரு விடுதலைச் சத்திரசிகிச்சையை உடனடியாக செய்யவேண்டும் . புற்றுநோய் பரவிய பகுதியை அகற்றுவது மருத்துவ உலகில் சரியான தீர்வு . இல்லாவிட்டால் எமது தேசியத் தலைவரின் சிந்தனை வழிநடத்தலும், எமக்காக தங்கள் பெறுமதிமிக்க உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் இலட்சியக்கனவும் சுக்குநூறாக உடைந்து அழிந்து விடும். தேசியத்தலைவரின் சிந்தனை மீதும் மாவீரர்களின் இலட்சியத்தின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையை தமிழர்கள் நாங்கள் வைத்திருக்கின்றோம். அவர்களுக்கு களங்கம் கற்பிக்கும் எவனையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம்.

தேசியச்செயற்பாட்டாளர்களாக, தேசியத்தலைவரின் கட்டளைகளை ஏற்றுக்கொண்ட தமிழீழ மக்களாக, அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம். தேசியத்தலைவரின் சிந்தனையையும், தமிழீழக் கோட்பாட்டையும் காப்பாற்ற நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முறியடிப்போம். வெற்றிநிச்சயம், துரோகத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது. தலைவன் வழிநின்று அனைத்துச் சதிகளையும் முறியடிப்போம்.

-அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments