சித்தியின் சித்திரவதையால் உந்துருருளியில் நெடுந்தூரம் சென்ற சிறுவன்!

You are currently viewing சித்தியின் சித்திரவதையால் உந்துருருளியில் நெடுந்தூரம் சென்ற சிறுவன்!

நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை வரை 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சிறுவன் ஒருவர் உந்துருருளியில் சென்றதாக கெபத்திகொல்லாவ சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாத 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு சென்றுள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனை சிறீலங்கா காவல்துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வவுனியா கெபத்திகொல்லாவ பிரதான வீதியின் புளியங்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் உந்துருருளியில் செல்வதை பிரதேசவாசிகள் கண்டதுடன் பிரதேசவாசிகளின் சந்தேகத்தின் அடிப்படையில் கெபத்திகொல்லாவ தலைமை சிறீலங்கா காவல்துறை பரிசோதகர் சமில ரத்நாயக்கவிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இந்த சிறுவனை பாதுகாப்பாக தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சிறுவனுக்கு உணவு, பானங்கள் வழங்கியதுடன், பராமரிப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், நெடுங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் சித்தியின் அன்றாட துன்புறுத்தல் மற்றும் தொல்லை தாங்க முடியாமல் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு உந்துருருளியில் பயணிக்க தீர்மானித்துள்ளதாக சிறுவன் குறிப்பிட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments