திருகோணமலையில் இந்திய போர்க்கப்பல்!

You are currently viewing திருகோணமலையில் இந்திய போர்க்கப்பல்!

இந்திய கடற்படையின் கமோர்டா கப்பல் கடந்த 20 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது, இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ரா இலங்கையின் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பனாகொடவை சந்தித்தார்.

இந்நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருகோணமலை துறைமுகத்தில் நேற்று முன்தினம் விசேட யோகா நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை கடற்படை அதிகாரிகள் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்புடன் இந்திய கடற்படையின் கமோர்டா கப்பல் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments