திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் !

You are currently viewing திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் !

திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை குச்சவெளி சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் படுகாயம் அடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் குச்சவெளி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments