திருகோணமலை பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்! 30 மாணவர்கள் வைத்தியசாலையில் !

You are currently viewing திருகோணமலை  பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்! 30 மாணவர்கள் வைத்தியசாலையில் !

திருகோணமலையில் உள்ள மூதூரில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம்  நேற்றைய தினம் (25-06-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

மூதூரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments