திலீபன் அழைப்பது சாவையா…?என்ற பாடலைப்பாடியவர் காலமானார்!

You are currently viewing திலீபன் அழைப்பது சாவையா…?என்ற பாடலைப்பாடியவர் காலமானார்!

திலீபன் அழைப்பது சாவையா…? இந்த சின்ன வயதில் இது தேவையா…?பாடிய குரல் ஓய்ந்தது!தமிழ் இனத்திற்காக, மொழிக்காக, உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள்.கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி. யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும்,தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாநோன்பின் போது, ‘திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா?’ என்ற பாடலையும் பாடியிருந்த பெண் கவிஞரும் பாடகியுமாகியன திருமதி மரியதாஸ் மேரி நாயகி (நவாலியூர் நாயகி) அவர்கள் 26.10.21 காலமாகினார் என்ற செய்தி எங்கள் மனங்களை உருக வைக்கின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments