துல்கர் சல்மானின் இணையத்தளம் முடக்கம் – புலிக்கொடி பறக்கின்றது!

You are currently viewing துல்கர் சல்மானின் இணையத்தளம் முடக்கம் – புலிக்கொடி பறக்கின்றது!

கடந்த பிப்ரவரி மாதம், துல்கர் சல்மான் தயாரிப்பில் அனூப் சத்யன் இயக்கத்தில் ‘வரனே அவஷ்யமுண்ட்’ என்ற திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, ஷோபனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை விமர்சிக்கும் வகையில் இருந்த குறித்த திரைப்படத்திற்கு பல கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் அவருடைய உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டில் முடக்கப்பட்ட இணையத்தளத்தில் முடக்கியவரின் பெயராக தலைவரின் மகன் சாள்சின் பெயரை பதிவுசெய்துள்ளதோடு ( Hacked By Charles Anthoney With Eeelam X Boys ) குறித்த தளத்தில் தமிழீழத் தேசியக் கொடியும் தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இச் செயலானது குறித்த படக்குழுவினருக்கு பாரிய பதிலடியை கொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட இணையத்தளத்தளம் 

http://www.anoopsathyan.com

துல்கர் சல்மானின் இணையத்தளம் முடக்கம் - புலிக்கொடி பறக்கின்றது! 1
துல்கர் சல்மானின் இணையத்தளம் முடக்கம் - புலிக்கொடி பறக்கின்றது! 2
பகிர்ந்துகொள்ள