தையிட்டியில் 3ம் கட்டமாக நடைபெறும் போராட்டத்தின் 3ம் நாள் பதிவுகள்!

You are currently viewing தையிட்டியில் 3ம் கட்டமாக நடைபெறும் போராட்டத்தின் 3ம் நாள் பதிவுகள்!

தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து வரும் சிறீலங்கா அரசையும் அதன் இன அழிப்பு படைகளையும் எதிர்த்து இற்றைவரை ஒற்றையாய் போராட்டங்களை நடாத்திவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தையிட்டி புத்தவிகாரைக்கு எதிரான போராட்டம் 3ம் கட்டமாக தொடங்கப்பட்டு இன்று 3ம் நாளாக நடைபெற்று வருகின்றது.

மனிதாபிமான பணிகளை செய்துவிட்டு காட்சி பொருளாக்கி வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்கள் மத்தியில் உரிமைக்காக நில அபகரிப்பிற்கு எதிராக துணிச்சலாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் எமது நில அபகரிப்பை நிறுத்த அல்லது தற்காலிய தடையை ஏற்படுத்த விளைவிக்கும் என்ற நம்பிக்கையோடு முன்னெடுக்கப்படுவதோடு உலகத்திற்கும் செய்தி சொல்லப்படுகின்றது.

இப்போராட்டத்தின் தாற்பரியத்தை அறியமுடியாத சில சமூக ஊடகத்தின் மதுப்பிரியர்கள் கொச்சைத்தனமாக கருத்துக்களை எழுதிவருவதையும் அவதானிக்க முடிகிறது.
2009 இற்கு பிற்பாடு தங்களுக்கு நாடுநாடாக சொத்தை சேர்ப்பதில் கவனத்தை செலுத்திவரும் இந்த சுயநலக்கூட்டம் அவ்வப்போது மதுக்களை அருந்தும்போது சமூக ஊடகங்களில் வாந்தி எடுப்பதை காணமுடிகின்றது.

இப்படியானவர்களை இனங்கண்டு உணர்வுள்ள தன்மானமுள்ள தமிழர் இந்த அறம் விலகி நிற்கும்  கொச்சைவாதிகளை புறம் தள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

தையிட்டியில் 3ம் கட்டமாக நடைபெறும் போராட்டத்தின் 3ம் நாள் பதிவுகள்! 1 தையிட்டியில் 3ம் கட்டமாக நடைபெறும் போராட்டத்தின் 3ம் நாள் பதிவுகள்! 2 தையிட்டியில் 3ம் கட்டமாக நடைபெறும் போராட்டத்தின் 3ம் நாள் பதிவுகள்! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments