தையிட்டி விகாரை சட்டவிரோதம்! -பிரதேச செயலாளர் உறுதி.

You are currently viewing தையிட்டி விகாரை சட்டவிரோதம்! -பிரதேச செயலாளர் உறுதி.

தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என்பதை தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ உறுதிப்படுத்தினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments