தையிட்டி விவகார்தை அச்சுறுத்தி பணிய வைக்கும் நோக்கில் சிறீலங்கா காவற்துறையால் அழைப்பாணை!

You are currently viewing தையிட்டி விவகார்தை அச்சுறுத்தி பணிய வைக்கும் நோக்கில் சிறீலங்கா காவற்துறையால் அழைப்பாணை!

அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக 12.02.2025 அன்று போராட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி சிறீலங்கா காவல்த்துறை நிலையத்திற்கு வருகைதருமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் இன்று (20.02) பகல் 12.00 மணிக்கு பலாலி சிறீலங்கா காவல்த்துறை நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு வருமாறு இவ் அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான பங்குபற்றியதற்காக திருமதி வாசுகி சுதாகரன் அவர்களையும் பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு நாளை 20-02-2025 மு.ப 11.00 மணிக்கு சமூகமளிக்குமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலியில
அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்ற சிறீலங்கா காவல்த்துறையினர் குறித்த கட்டளையை கையளித்துச் சென்றுள்ளனர்.
இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க சனநாயகத்திற்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது என திருமிகு செல்வராசா கயேந்திரன் தெரிவித்துள்ளார்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply