அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக 12.02.2025 அன்று போராட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி சிறீலங்கா காவல்த்துறை நிலையத்திற்கு வருகைதருமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் இன்று (20.02) பகல் 12.00 மணிக்கு பலாலி சிறீலங்கா காவல்த்துறை நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு வருமாறு இவ் அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று