தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரட்நாயக்க என்பவரினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கீர்த்தி ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ராஜபக்ஷர்கள் தொடர்பு படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சதுரிகா ரணவக்க என்ற பயிலுனர் சட்டத்தரணி முன்னிலையில் தாம் ரவிராஜிடம் தாம் இதனைக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது பூத உடல் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாலைக்கு தான் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பான சகல விபரங்களையும் எழுதி கீர்த்தி ராட்நாயக்க என தமது பெயரையும் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிற்காலத்தில் இலங்கையின் பிரதான ஊடக நிறுவனமொன்று இந்த தகவல்களை திரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவமானது கடற்படை கப்பம் கோரும் கும்பல் பிள்ளையானுடன் இணைந்து மேற்கொண்ட குற்றச்செயல் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளையான் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.