நிலத்தில் புதைந்த வீடு!

You are currently viewing நிலத்தில் புதைந்த வீடு!

நோர்வேயில் தலைநகர் ஒஸ்லோவை அடுத்துள்ள “Lillestrøm / Skjetten” பகுதியில், வீடொன்று நிலத்தில் புதையுண்டதால் அங்கு பரபரப்பு நிலை தோன்றியுள்ளது. சுமார் அரை மீட்டர் அளவுக்கு நிலத்துள் புதைந்துள்ள இவ்வீடு அமைத்துள்ள இடம், களிமண் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தையடுத்து, அவ்விடத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புவியியல் ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வுகளுக்காக குறித்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும், அவ்விடம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.

குறித்த இடத்துக்கு அருகிலுள்ள “Gjerdrum” என்ற இடத்தில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் களிமண் தரையில் புதையண்டதும், 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments