நெடுந்தீவு இளைஞர் கொலை சந்தேக நபர் காயங்களுடன் கைது!

You are currently viewing நெடுந்தீவு இளைஞர் கொலை சந்தேக நபர் காயங்களுடன் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை சிறீலங்கா காவற்துறையினர் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் சிறீலங்கா காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments