நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி!

You are currently viewing நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி!

நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம் மற்றும் ஆஸ்பத்திரியை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் உடலில் குண்டுகளை கட்டிக் கொண்டு பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்க செய்தனர்.

மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments