நைஜீரியாவில் 274இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோட்டம் !

You are currently viewing நைஜீரியாவில் 274இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோட்டம் !

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அங்குள்ள சிறைகளிலிருந்து 274இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய சீர்திருத்தச் சேவை இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தப்பியோடியவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் அந்த நாட்டுக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் நிலவும் மழையுடனான காலநிலையினால் இதுவரை 269 பேர்வரை உயிரிழந்ததுடன், 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர்வரை காணாமல் போயுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments