வீரவணக்க நிகழ்வு
31.05.2025 இன்று நோர்வேயில் அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு ஓசுலோவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது
தமிழீழ விடியலுக்காக இறுதிவரைப்போராடி வீரச்சாவடைந்து இதுவரை அறிவிக்கப்படாத 19 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.