பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட மன்னார் சட்டத்தரணிகள்!

You are currently viewing பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட மன்னார் சட்டத்தரணிகள்!

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக இன்று (29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரியும்  மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இந்த பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை (30) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள உள்ளதோடு ,ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி  இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பை மேற்கொண்ட மன்னார் சட்டத்தரணிகள்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments