பருத்தித்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை காணவில்லை!

You are currently viewing பருத்தித்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை காணவில்லை!

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்கள் ஒரு வாரமாகியும் கரைதிரும்பாத நிலையில், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து கடந்த ஏழாம் திகதி புறப்பட்ட மீனவர்களைளே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, கல்முனை, திருகோணமலை மற்றும் முள்ளியானைச் சேர்ந்த மேற்படி நான்கு மீனவர்களும், புறப்பட்ட தினத்திலிருந்து ஐந்து தினங்களுக்குள் கரைதிரும்பியிருக்க வேண்டும்.

எனினும், நீண்ட நாள்களாகியும் கரைதிரும்பாததையடுத்தே இது தொடர்பில் சிறீலங்கா பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் சிறீலங்கா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments