பருத்தித்துறையில் பதற்றம் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடித்த மக்கள் !

You are currently viewing பருத்தித்துறையில் பதற்றம் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடித்த மக்கள் !

யாழ். கடற்பரப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! கொந்தளித்த மீனவர்கள்! நடந்தது என்ன?

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் 51 பிரதான வீதி வழிமறித்து பந்தல் அமைக்கப்பட்டு இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமும்  ஒட்டுக்குழு  அமைச்சர் ( கடற்தொழில் அமைச்சருக்கு )  டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது 

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில்   இரவு இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலையேற்பட்டதுடன், இரு இந்திய இழுவை படகுகள் முற்றுகையிடப்பட்ட நிலையில் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பருத்தித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் அங்கு தொழில் செய்து கொண்டிருந்த நிலையில் அதிரடியாக பருத்தித்துறை மற்றும் சுப்பர்மடம் பகுதிகளில் இருந்து சுமார் 15 வரையான படகுகள் இந்திய இழுவை படகுகளை முற்றுகையிட்டு வலைகள், மீன்களை கைப்பற்றினர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்த   பேரினவாத இலங்கை கடற்படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் எமது மீனவர்களிடம் சிக்கியிருந்த இந்திய இழுவை படகை கைப்பற்றிய கடற்படையினர் அதிலிருந்த இந்திய மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கொண்டு சென்றுள்ளனர். 

இதேவேளை பதற்றமான சூழலுக்கு நடுவே  பேரினவாத  இலங்கை அரசுக்கான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்ற சமரசம் செய்ய முயற்சித்தபோதும் இந்த விடயத்தில்  நீங்கள் தலையிடவேண்டாம். என மீனவர்கள் கூறியுள்ளனர்.  

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments