பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் நகரபிதா உயிரிழப்பு!

You are currently viewing பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் நகரபிதா உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் நகரபிதா விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேன்று வியாழக்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.

முன்னாள் நகரபிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது புளியம்பொக்கணை பகுதியில், பாதுகாப்பற்ற  நிலையில் வீதியில் அமைக்கப்பட்ட சிறு மேட்டில் (பம்மிங்) மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments