பளையில் அதிகாலையில் வீதியில் கிடந்த சடலம்!

You are currently viewing பளையில் அதிகாலையில் வீதியில் கிடந்த சடலம்!

பளை நகரப் பகுதியில் ஏ9 வீதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பளை நகரப்பகுதிக்கு அருகாமையில் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் ஏ9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.

உடனடியாக 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த நபர் இறந்து பல மணி நேரமாகி விட்டதாக கடமையில் உள்ள வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளந்திரையன் என்பவர் ஆவார். சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments