பளையில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது..

You are currently viewing பளையில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது..

பளை தம்பகாமம் பகுதியில் இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சொரம்பற்று பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், 23 கிலோ 165 கிராம் கஞ்சாவுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சான்றுப் பொருட்களுடன் பளை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply