பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு!

You are currently viewing பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு!

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல்  கிடைத்துள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.

அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று சிறீலங்கா காவற்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply