முல்லைத்தீவில் கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்காகச் சென்ற இரண்டு பிரதேச சபை ஊழியர்கள் மீது கிராமவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கரைதுறைப்பற்று பிரதேச சபை பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபை ஊழியர் இருவர் மீது தாக்குதல் !
