பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மன விரக்தியில் எடுத்த தவறான முடிவு!

You are currently viewing பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மன விரக்தியில் எடுத்த தவறான முடிவு!

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3 பிள்ளைகள் மூன்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். மன விரக்தியில் இருந்த இவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments