பூநகரியில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!!

You are currently viewing பூநகரியில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!!

கிளிநொச்சி பூநகரி பகுதியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பூநகரி சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கூலர்  வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன் போது குறித்த வானத்திலிருந்து 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சந்தேக நபர்களையும்  நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply