பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

You are currently viewing பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி நேற்று  புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம்  ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம்   பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தைச் சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாறை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த பிரதேசத்திற்கு வருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ்   மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 

பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 1

 

 

பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments