பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவுக்கூடத்தில் மே 18 நினைவேந்தல் நிகழ்வு
பெல்சியம்: பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவுக்கூடத்தில் இன்று ( 17.05.2025 ) தமிழின அழிப்பு நினைவு நாளை ஒட்டி ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், எமது சிறார்கள் தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசு சர்வதேச துணையோடு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை உணர்வெழுச்சியோடு நினைவுகூர்ந்தனர்.
குறித்த உணர்வுபூர்வமான நிகழ்வின் மூலம், எதிர்கால சந்ததிக்கு எமது வரலாறு , தியாகம் ஆகியவை நினைவூட்டப்பட்டது




