பேரிடரில் சிக்கிய பாகிஸ்தான் ! இதுவரை 27 பேர் உயிரிழப்பு !

You are currently viewing பேரிடரில் சிக்கிய பாகிஸ்தான் ! இதுவரை 27 பேர் உயிரிழப்பு !

பிபர்ஜாய் சூறாவளி (Cyclone Biparjoy) நெருங்கி வருவதால் பாகிஸ்தானில் கனமழை காரணமாக பாகிஸ்தானில் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் புயல் பேரழிவை ஏற்படுத்தியது. நான்கு மாவட்டங்களில் அவசர நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், 200 கால்நடைகள் இறந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தைமூர் அலி கான் தெரிவித்தார்.

மழையில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் சாய்ந்தன. தற்போதைய சூழ்நிலையில் மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments