பொபினி மாநகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

You are currently viewing பொபினி  மாநகரத்தில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

பிரான்சு 93 மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் அதிகம் வாழும் பொபினி என்னும் மாநகரத்தில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர், துணை முதல்வர் பொதுச்சுடர் ஏற்றி வைக்க பொதுமக்கள்,இளையவர்கள், சிறியவர், பெரியோர், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டு மீண்ட குடும்பங்கள் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்காக சுடர் ஏற்றி, மலர் கொண்டு வணக்கம் செய்திருந்தனர்.

இதேவேளை

இன்று பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் (16) ஆண்டினை நினைவில் ஏந்தி அதன் அடையாள சின்னத்தை வைத்தும்,கறுப்புக் கொடிகளைக்கட்டியும் கவயீர்ப்பு நினைவு செய்யப்படுகின்றது .மே18 அன்று மதியம் 13.30 மணிக்கு இன உணர்வு கொண்ட தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி நீதிக்கான பேரணியில் பங்குபற்றவும்  உள்ளனர்.

 

பொபினி மாநகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! 1

பொபினி மாநகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! 2

பகிர்ந்துகொள்ள

Leave a Reply