மகனைத் தேடிச் சென்ற கும்பல் தாய், தந்தை மீது வாள்வெட்டு!!

You are currently viewing மகனைத் தேடிச் சென்ற கும்பல் தாய், தந்தை மீது வாள்வெட்டு!!

யாழ். இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகனைத் தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கி விட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது என்று கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments