மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்!

You are currently viewing மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சுரேஷ், சுப்பிரமணியம் சத்தியநாதன், கணபதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்ளில் இருவரை தவிர ஏனைய 6 பேரும் புதுமுகங்களாக உள்ளனர்.

வேட்பாளர்கள் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதேவேளை சுயேச்சை குழு சார்பில் வஜ.லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழுவொன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இம்மாவட்டத்தில் 3 சுயேச்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments