மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 03 பேர் மரணம்! 206 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 03 பேர் மரணம்! 206 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 206கொரனா தொற்றாளர்கள்இனங்காணப்பட்டுள்ளதுடன் 03மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 300 என்ற கணக்கில் அடையாளப்படுத்தப்பட்டுவந்த கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக 200 என்ற கணக்கில் குறைந்துள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 7959பேர் கொரனா தொற்றாளர்களாகஇனங்காணப்பட்ட அதேநேரம் கடந்த வாரம் 1414பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 34மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 248பேர் கொரனா தொற்றினால் மரணமடைந்துள்ளதுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடிய 55கொரனாதொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 30வயதுக்கு மேற்பட்ட 278000பேருக்குதடுப்பூசிகள் ஏற்றப்பட்தை தொடர்ந்து 95விதமானவாகளுக்கு முதல் கட்ட தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளதாகவும் 219, 000பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு74வீதமானவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்றுதடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments