மதுபான விருந்தால் நண்பனை மண்வெட்டியால் கொத்தி கொலை!

You are currently viewing மதுபான விருந்தால் நண்பனை மண்வெட்டியால் கொத்தி கொலை!

வவுனியாவில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் இன்று (10) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் இருவர் மதுபான விருந்து நடத்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில் மதுபாட்டில்கள், இறந்த நபரைத் தாக்க பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்ற நிலையில் இன்று அதிகாலை ஈச்சங்குளம் சிறீலங்கா காவற்துறையினருக்கு வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறீலங்கா காவற்துறையில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments