மதுபோதையில் மனைவியை தீயிட்டு கொழுத்திய கணவன்!

You are currently viewing மதுபோதையில் மனைவியை தீயிட்டு கொழுத்திய கணவன்!

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் அச்சுவேலி தோப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம் பெற்று வந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக தெரிவிக்கப் படுகிறது.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா வயது 28, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தீயினை மூட்டிய கணவன் தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சு வேலி சிறீலங்கா பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments