மத்திய ஆப்பிரிக்க சிறையில் இருந்து தப்ப முயன்ற 129 கைதிகள் உயிரிழப்பு !

You are currently viewing மத்திய ஆப்பிரிக்க சிறையில் இருந்து தப்ப முயன்ற 129 கைதிகள் உயிரிழப்பு !

மத்திய ஆப்பிரிக்க காங்கோவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ பரவலில் கைதிகள் சிறை கதவுகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற போது 129 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சிறைச்சாலையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 1,500 கைதிகள் வரை அடைக்கும் வசதிகொண்ட இச்சிறைச்சாலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்தை சாதகமாக பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். ஒரேசமயத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறை கதவுகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, கைதிகளுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் கைதிகள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறலில் மயக்கமடைந்த கைதிகள் பலரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதேவேளை, தப்பிச்செல்ல முயன்ற சிறைக்கைதிகள் சிலர் மீது பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க சிறையில் இருந்து தப்ப முயன்ற 129 கைதிகள் உயிரிழப்பு ! 1

சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் மற்றும் துப்பாக்கி சூட்டில் மொத்தம் 129 கைதிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments