மனிதப் புதைகுழி வலயத்தின் பாதுகாப்பை உதிப்படுத்துங்கள்!!

You are currently viewing மனிதப் புதைகுழி வலயத்தின் பாதுகாப்பை உதிப்படுத்துங்கள்!!
செம்மணி சிந்து பார்த்தியை மனிதப் புதைகுழி வலயமாக உடன் அறிவியுங்கள்
* நீதியான விசாரணை வேண்டும்.
*அகழ்வு க்கு ஒதுக்கப்பட்ட நீதி போதாது நிறுத்தப்படலாம்.
* புதைகுழி வலயத்தின் பாதுகாப்பை உதிப்படுத்துங்கள்
*சர்வதேசத்தின் உதவியை நாடுவோம்
பாராளுமன்றதில் கஜேந்திரகுமார் எம்பி
யாழ் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்ற அமர்வில் நீதி அமைச்சரிடம் குறித்த கோரிக்கை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மயானத்துக்கு அருகாமையில் பாரிய மனிதப் புதைகுழி இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
தற்போது வரை மூன்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 7க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிருசாந்தி என்கின்ற மாணவி குறித்த பகுதிக்கு அருகாமையில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் குறித்த பகுதியைச் சூழ 600க்கு மேற்பட்ட மனித சடலங்கள் இருக்கலாம் என்ற கருத்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் குறித்த பகுதியை மனிதப் புதைகுழி வலயமாக அரசாங்கம் உடனடியாக அறிவிப்பதோடு அதன் பாதுகாப்பையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் தற்போது வரை குறித்த பகுதி பாதுகாப்பற்ற ஒரு வலையமாகக் காணப்படுகின்ற நிலையில் ஆதாரங்கள் அழிக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏதுவாக உள்ளது.
அதுமட்டுமல்லாது நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி போதாத நிலையில் தற்போது இடம் பெற்று வரும் அகழ்வுப் பணிகள் சில நாட்களில் நிறுத்தப்படுவதற்கான அபாயம் தெரிகிறது.
அரசாங்கம் என்ற வகையில் பக்க சார்பு இன்றி அகழ்வுப் பணி தொடர்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை விரைவாக பெற்று கொடுக்க வேண்டும் அல்லாவிட்டால் சர்வதேச அமைப்புகளை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்
ஆகவே அரசாங்கம் என்ற வகையில் செம்ணியில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு நீதியானதும் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்
பகிர்ந்துகொள்ள

Leave a Reply