யாழ்ப்பாணம், மன்டைதீவு கடற்கரையில் 46 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சமயம் கடற்படையினரைக் கண்டு கை விட்டுச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதேநேரம் குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஊர்காவற்றுறை சிறீலங்கா காவற்துறையினரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்டைதீவு கடற்கரையில் 46 கிலோ கஞ்சா மீட்பு!
