மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் பரப்புரைக்குள் தலையிட்ட சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் பரப்புரைக்குள் தலையிட்ட சிறீலங்கா காவற்துறை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது அங்கு சென்றிருந்த மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் துண்டுப்பிரசுரங்களை பறித்துள்ளனர்.

இதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் சிறீலங்கா காவற்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் மருதங்கேணி பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் பரப்புரைக்குள் தலையிட்ட சிறீலங்கா காவற்துறை! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments