மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம் !

You are currently viewing மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம் !

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த அக்சயன் , சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் வீட்டின் ஒரேயொரு பிள்ளை ஆவார். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு வெள்ளிக்கிழமை (14) காலை வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி மரணமானார்.

அவரது பூதவுடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி உயிரிழந்தார் செய்தி காட்டுதீ போல் பரவியது. முழுக் காரைதீவு பிரதேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments