மருத்துவர் அர்ச்சுணாவின் நச்சுக்கருத்துகள்!

You are currently viewing மருத்துவர் அர்ச்சுணாவின் நச்சுக்கருத்துகள்!

மருத்துவர் அர்சுணா முன் வைத்த கருத்துக்கள்…….

மூளை இல்லாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

தேசியத் தலைவர் அறத்தை விரும்பாதவர்.

தேசியத் தலைவர் முஸ்லிம்களை விரட்டி தவறிழைத்தார்.

அதனால் அந்தத் தவறை திருத்த தான் முயற்சிக்கிறார்.

தேசியத் தலைவர் 13ஐ ஏற்றுக் கொள்ளாததால் முள்ளிவாய்க்காலில் பேரழிவு ஏற்பட்டது.

இளைஞர்களை காணாமல் ஆக்கி கொலை செய்து எமது விடுதலைப் போராட்டம் அழிவுக்கு வருவதற்கு அரசாங்கத்தோடு நின்று ஒட்டுண்ணிகளாக செயல்பட்டு மக்களை துன்புறுத்தி கொலை செய்த கொடியவர்களை வெள்ளை அடித்து அவர்களை பெரும் தலைவர்களாக காட்டியது.

ஒரு மருத்துவருக்கு இந்த கதைகள் தேவையா என்பதை நாங்கள் ஆய்வு செய்து பேசுவது நல்லது இப்படிப் பேசுகின்ற ஒருவர் எங்கு நிற்கின்றார் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

மருத்துவத்துக்காக மட்டும் போராடி இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது
இதை புரிந்து கொள்ளாமல் எழுத வருகின்றவர்கள் அவருடைய கருத்துக்களை முதலில் ஆய்வு செய்யுங்கள்.

மருத்துவத்தில் புரட்சி செய்ய விரும்பினால் அதை செய்வது எல்லோருக்கும் நல்லது ஆனால் போராட்டத்தை காயப்படுத்தி நல்லிணக்க அரசியலுக்குள் நின்று எமது விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த துடிக்கின்ற இந்த மருத்துவர் உடைய கருத்தை நாங்கள் ஆராயாமல் தனிமனித சகதி உணர்வுக்குள் வீழ்ந்து எங்கள் விடுதலையை சிதைக்க நாங்களே காரணமாகி விடக்கூடாது.

 

4 4 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments