மல்லாவியில் குடும்பஸ்தர் யானை தாக்கி மரணம்!

You are currently viewing மல்லாவியில் குடும்பஸ்தர் யானை தாக்கி மரணம்!

முல்லைத்தீவு – மல்லாவி, வடகாடு வயற்பகுதியில் இருந்து சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. காலையில் வயலுக்கு சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொல்லவிளாங்குளம் – வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments