மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

You are currently viewing மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக செட்டிகுளம் காவல்த்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டவர் இன்றுகாலை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் தமிழரசு கட்சியின் இளைஞரணியில் அங்கம் வகிப்பதுடன், கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வவுனியா நகரசபையின் உபநகர பிதாவாக பதவி வகித்திருந்தார்.

பகிர்ந்துகொள்ள