சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பகல் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மருமகன் மகளை தாக்கியதை தந்தை கண்டுள்ளார்.
அவ்வேளை தனது மருமகனின் செயலை கண்டித்தவரின் தலையில் மருமகன் பொல்லால் அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த தந்தை கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.